வெள்ளி, 13 நவம்பர், 2009

பாசம்


சென்னை:


சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடராஜன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மகனை ஜாமீனில் விடுவித்தால் தனது உயிருக்கு ஆபத்து எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று தந்தை கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இடை,இடையே குறுக்கிட்டு பேசிய தந்தை கனகராஜினை நீதிபதி எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி விசாரணையின்போது கனகராஜ் குறுக்கிட்டுபேசியதால் நீ
திமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், நீதித்துறை பதிவாளர் ராமமூர்த்தி ஆகியோரை நீதிபதி சுதந்திரம் அழைத்து, கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.

பதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து கனகராஜினை அமையாக இருக்கச் செய்தனர். பின்னர் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுதந்திரம், நடராஜினை திருச்சி காவல்நிலையத்தில் காலை, மாலை நேரில் ஆஜர் ஆகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்
டையில் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டார்.

நடராஜின் தந்தையின் குறுக்கீடு காரணமாக நீதிமன்ற விசாரணை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக