புதன், 26 ஆகஸ்ட், 2009

நடிகர் விஜய் அரசியல் அவநம்பிக்கை



சென்னை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில். ''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார். இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார். ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

புதன், 19 ஆகஸ்ட், 2009

கிரிக்கெட் சச்சின்

கிரிக்கெட் போட்டிகளை காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது: சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளை காக்க சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. . டெஸ்ட் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லி, 20 ஓவர் போட்டியின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என்று எச்சரித் திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேகர், லலித் மோடி, ஹர்ஷா போக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழிகள் பற்றி பேசினர்.நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காப்பதற்கான ஒரே வழி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான். எனக்கு 10 வயதாகஇருந்த போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை காண்பதற்காக சென்றேன். கிரிக்கெட் வாரியம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சிறந்த மாணவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காணும்படி செய்ய வேண்டும்.
எல்லா இளைஞர்களுக்குமே இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசிய மிக்கதாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். அதே போல டெஸ்ட் போட்டிகளை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினம்


இன்று இந்தியயாவில் சுதந்திர தினம் கொண்டாட படுகிறது.அனைவருக்கும் ஸுதந்தித்ர தின வாழ்த்துகள் .