வியாழன், 23 ஜூலை, 2009

சினிமா

இனியும் இப்படி செய்தால்---:நடிகை ஐஸ்வர்யாராய் கடும் எச்சரிக்கை
உலக அழகியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இது குறித்து மும்பை ஊடகங்கள் சிலவற்றில், ஐஸ்வர்யா ராய் தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெறமாட்டேன் என்று நிபந்தனை விதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால், அதற்கு மெலிந்த உடல்வாகு அவசியம் என்று ஐஸ்வர்யா ராய் கணவரிடம் குறிப்பிட்டதாகவும், அதற்கு அபிஷேக் பச்சனும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஐஸ்வர்யா ராய் கொதித்தெழுந்து விட்டார். உடனடியாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு தகுந்த பதிலடி தராமல் விடமாட்டோம். இனியும் அவர் சும்மா இருக்க மாட்டேன்.
இதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பற்றி விமர்சிக்கும்போது அவர் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இப்படி அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்தது. தனது திருமணத்துக்கு பின்னும் அவர் தொழில் ரீதியாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமா நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’’என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக