சனி, 11 ஜூலை, 2009

தமிழ் சினிமா

விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.

இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.

படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.

சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.

எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக