வியாழன், 23 ஜூலை, 2009
சினிமா
உலக அழகியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இது குறித்து மும்பை ஊடகங்கள் சிலவற்றில், ஐஸ்வர்யா ராய் தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெறமாட்டேன் என்று நிபந்தனை விதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால், அதற்கு மெலிந்த உடல்வாகு அவசியம் என்று ஐஸ்வர்யா ராய் கணவரிடம் குறிப்பிட்டதாகவும், அதற்கு அபிஷேக் பச்சனும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஐஸ்வர்யா ராய் கொதித்தெழுந்து விட்டார். உடனடியாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு தகுந்த பதிலடி தராமல் விடமாட்டோம். இனியும் அவர் சும்மா இருக்க மாட்டேன்.
இதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பற்றி விமர்சிக்கும்போது அவர் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இப்படி அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்தது. தனது திருமணத்துக்கு பின்னும் அவர் தொழில் ரீதியாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமா நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’’என்று கூறப்பட்டுள்ளது.
சனி, 11 ஜூலை, 2009
நிரழிவு
நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு
அண்மையில் நீரிழிவு தொடர்பான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.
சூரிய கிரகணம்
22ல் தேதி முழு சூரிய கிரகணம் தெரியும்
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் 22ம் தேதி நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்து தெரிவித்துள்ளது.
’’மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணம், வரும் 22ம் தேதி நிகழும். அதிகாலை 5 மணி 28 நிமிடத்திற்கு கிரகணம் துவங்கி, 10 மணி 42 நிமிடத்திற்கு முடிவடைகிறது.
இந்தியாவின் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், எஞ்சியுள்ள பகுதிகளில்( சென்னை உட்பட) பகுதி சூரிய கிரகணமாகவும் தெரியும்.
சென்னையில் அன்றைய தினம், சூரிய உதயம் காலை 5 மணி 52 நிமிடங்களுக்கு ஏற்படுகிறது. சென்னையில் கிரகணத்தின் உச்ச நிலை, 6 மணி 21 நிமிடத்திற்கு உணரப்படும். அப்போது 69 சதவீத சூரியன், சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும்.
காலை 7 மணி 18 நிமிடத்திற்கு கிரகணம் முடிவடைகிறது. இதேபோன்று பகுதி சூரிய கிரகண நிகழ்வு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நடக்கும். இந்த கிரகணமும் சென்னையில் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளது
தமிழ் சினிமா
விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களி
ல் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.
இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.
படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.
சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.
வெள்ளி, 10 ஜூலை, 2009
கிரிகெட்
புக்கனனுக்கு கங்குலி கண்டனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜான்புக்கனன் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு கிரிக்கெட்டின் எதிர்காலம்; டுவென்டி 20 கிரிக்கெட்டின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்திய அவர், கங்குலி பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜான்புக்கனனின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கங்குலி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கவாஸ்கரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை புக்கனன் தனது புத்தகத்தில் குறை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள், இந்தியர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு பழக்கமாகி விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. சில பகுதிகளை இணையதளத்தில் வாசித்தேன். அவரது விமர்சனங்கள் தேவையில்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது போன்ற விஷயங்களை அவர் எழுதியிருக்கக்கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் செய்யவில்லை. வெளியான தகவல்கள் எல்லாமே ழூகங்கள் தான்' என்று மற்றொரு கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.