வியாழன், 23 ஜூலை, 2009

சினிமா

இனியும் இப்படி செய்தால்---:நடிகை ஐஸ்வர்யாராய் கடும் எச்சரிக்கை
உலக அழகியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இது குறித்து மும்பை ஊடகங்கள் சிலவற்றில், ஐஸ்வர்யா ராய் தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெறமாட்டேன் என்று நிபந்தனை விதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால், அதற்கு மெலிந்த உடல்வாகு அவசியம் என்று ஐஸ்வர்யா ராய் கணவரிடம் குறிப்பிட்டதாகவும், அதற்கு அபிஷேக் பச்சனும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஐஸ்வர்யா ராய் கொதித்தெழுந்து விட்டார். உடனடியாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு தகுந்த பதிலடி தராமல் விடமாட்டோம். இனியும் அவர் சும்மா இருக்க மாட்டேன்.
இதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பற்றி விமர்சிக்கும்போது அவர் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இப்படி அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்தது. தனது திருமணத்துக்கு பின்னும் அவர் தொழில் ரீதியாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமா நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’’என்று கூறப்பட்டுள்ளது.

சனி, 11 ஜூலை, 2009

நிரழிவு

நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு

அண்மையில் நீரிழிவு தொடர்பான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.


நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

கிளைசீமிக் குறியீட்டு அளவில் நோக்கும்போது நாம் உட்கொள்ளும் அரிசிகள் பற்றிக் குறிப்பாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது. நீங்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உட்கொண்டாலும் அவை ஒரே மாதிரியான மாற்றத்தையே குருதி சீனியின் அளவில் ஏற்படுத்துகின்றன. எனவே எந்த அரிசிச் சோறை உட்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் சாப்படும் சோற்றின் அளவை அதிகரிக்கக் கூடாது, அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

அதே போல “சாதாரண பாண் கூடாது. தவிட்டுப் பாண்தான் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது” என்ற கருத்தும் தவறானது. ஏனெனில் இரண்டினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் ஏறத்தாளச் சமமானதே.

தவிட்டுப் பாண் சாதாரண பாணிலும் பாதகமானது என்ற கருத்தும் கருத்தரங்கில் சிலரால் முன்வைக்கப்படடது. தவிட்டுப் பாண் சுலபமாக செமிபாடு அடைவதற்காக சில நொதியங்களை பாண் தயாரிப்பின் பொது பேக்கரிகளில் சேர்க்கிறார்கள். இதனால் அது எளிதாக சமிபாடு அடைகிறது. ஆனால் அதே நேரத்தில் விரைவாக குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு கிளைசீமிக் இன்டெக்ஸ்சை உயர்த்துகிறது.

எனவே நீரிழிவு நோயாளர்கள் தவிட்டுப் பாணைத் தேடி ஓடுவது தவறானது. அவசியமற்றது.

ஆட்டாமா, குரக்கன் மா, அரிசிமா, ஓடியல் போன்ற எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் நீரிழிவுள்ளவர்கள் உண்ணலாம், எந்த அரிசிச் சோறானாலும் சாப்பிடலாம். ஆயினும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது.


அத்துடன் எதனுடன் உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நார்ப்பொருள் செறிந்துள்ள காய்கறிவகைகளை சேர்த்து உண்டால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibres) சேர்த்து உண்பது நல்லது. கடலை, பயறு, பருப்பு, சோயா, போஞ்சி போன்ற அவரை இன உணவுகளில் இது அதிகம் உண்டு. எனவே சொதி, சம்பல், பட்டர், மார்ஜரின் போன்றவற்றுடன் உண்பதைத் தவிர்த்து மேற் கூறியவாறு உண்பது உசிதமானது.

இனிப்பில்லாத கிறக்கர் பிஸ்கட் நல்லது என்பதும் தவறான கருத்தாகும். அதிலுள்ள மாப்பொருள் குருதியில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும்.

எனவே நீரிழிவு நோயாளர்கள் “பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் குறும் உணவாக எதைச் சாப்பிடுவது” எனக் கேட்பார்கள். நியாயமான கேள்வி. சிறிய வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழ வகைகளையோ, வெள்ளரி, கரட் போன்ற காய்கறிகளையோ சப்பிச் சாப்பிடலாம். களைப்பும் பசியும் நீங்கும். அதனால் சீனியின் அளவு அதிகரிக்காது.


பழங்களில், வாழைப்பழம் பற்றிப் பேசும் போது “கதலி நல்லது, கப்பல், ஆனைமாலு கூடாது” என்றே பலரும் கூறுவார்கள். இதுவும் மற்றொரு தவறான கருத்தே. கதலி, கப்பல், இரதை, ஆனைமாலு போன்ற எல்லாமே நல்லவைதான். ஏனெனில் இவை யாவற்றினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 10 லும் குறைவாகவே இருக்கின்றன. எனவே எல்லாமே பாதிப்பற்றவைதான். எந்த வாழைப் பழமானாலும் ஒவ்வொரு உணவுடனும் பாதியளவு சாப்பிடலாம்.


அன்னாசி, மாம்பழம் ஆகியவற்றைக் கூட உண்ணலாம். ஆனால் எவ்வளவு உண்பது என்பதே முக்கியமானது.

“மண்ணுக்கு கீழ் விளையும் எந்தக் கிழங்கு வகைகளையும் நான் தொடுவதே இல்லை” என பல நீரிழிவு நோயாளர்கள் சத்தியம் செய்வார்கள். இதுவும் தவறான கருத்தே. கிழங்கு வகைகள் அனைத்திலும் உள்ளது மாப்பொருள்தான். அரிசி, பாண், நூடில்ஸ் போன்றவற்றிலும் உள்ளது அதே மாப்பொருள்தான். எனவே அளவோடு உண்ணலாம்.

“வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. அது சாப்பிடக் கூடாதுதானே” எனக் கேட்டால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றைய கிழங்குகளிலும் கூடியதல்ல. எனவே நிச்சயம் சாப்பிடலாம். அத்துடன் வத்தாளையில் கரட்டீன் சத்தும் இருப்பதால் மற்றக் கிழங்குகளை விடச் சிறந்தது. மரவள்ளியும் சாப்பிடலாம் ஆனால் அதில் மாப்பொருளைவிட வேறு விட்டமின், கனிமங்கள் இல்லை என்பதால் சிறப்பான உணவாகக் கொள்ள முடியாது. ஆயினும் அளவோடு உண்பதில் தவறில்லை.

இதைப் படித்துவிட்டு குத்தரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை பிரயோசனமற்ற உணவுகள் எனக் கருதுவது தவறு. அவற்றில் விட்மின், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை சற்று அதிகமாக இருப்பதால் அவை போஷாக்குள்ள உணவு வகைகளே.

ஆயினும் நீரிழிவு நோயாளர்கள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நிர்ப்பந்திப்பது தவறானது. அதற்கான எந்த வித விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் இல்லை. மாப்பொருள் உணவின் அளவும், எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சூரிய கிரகணம்

22ல் தேதி முழு சூரிய கிரகணம் தெரியும்

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் 22ம் தேதி நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்து தெரிவித்துள்ளது.

’’மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணம், வரும் 22ம் தேதி நிகழும். அதிகாலை 5 மணி 28 நிமிடத்திற்கு கிரகணம் துவங்கி, 10 மணி 42 நிமிடத்திற்கு முடிவடைகிறது.

இந்தியாவின் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், எஞ்சியுள்ள பகுதிகளில்( சென்னை உட்பட) பகுதி சூரிய கிரகணமாகவும் தெரியும்.

சென்னையில் அன்றைய தினம், சூரிய உதயம் காலை 5 மணி 52 நிமிடங்களுக்கு ஏற்படுகிறது. சென்னையில் கிரகணத்தின் உச்ச நிலை, 6 மணி 21 நிமிடத்திற்கு உணரப்படும். அப்போது 69 சதவீத சூரியன், சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும்.

காலை 7 மணி 18 நிமிடத்திற்கு கிரகணம் முடிவடைகிறது. இதேபோன்று பகுதி சூரிய கிரகண நிகழ்வு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நடக்கும். இந்த கிரகணமும் சென்னையில் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளது

தமிழ் சினிமா

விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.

இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.

படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.

சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.

எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.

வெள்ளி, 10 ஜூலை, 2009

கிரிகெட்



புக்கனனுக்கு கங்குலி கண்டனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜான்புக்கனன் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு கிரிக்கெட்டின் எதிர்காலம்; டுவென்டி 20 கிரிக்கெட்டின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்திய அவர், கங்குலி பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜான்புக்கனனின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கங்குலி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கவாஸ்கரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை புக்கனன் தனது புத்தகத்தில் குறை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள், இந்தியர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு பழக்கமாகி விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. சில பகுதிகளை இணையதளத்தில் வாசித்தேன். அவரது விமர்சனங்கள் தேவையில்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது போன்ற விஷயங்களை அவர் எழுதியிருக்கக்கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் செய்யவில்லை. வெளியான தகவல்கள் எல்லாமே ழூகங்கள் தான்' என்று மற்றொரு கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.

தமிழக அரசியல் பாமக

இப்பொழுது நடந்துவரும் சட்டமன்ற கூடதொடரில் பாமக சாதி பிரசினை எழுப்பி உள்ளது.மக்கள் குறைக்களை திர்க்க இவர்களை சட்டமன்றதிருக்கு அனுப்பினால் சாதி பற்றி பேசுகின்றனர் .இது ஒரு அருவெறுப்பான அரசியல் நடத்துகின்றனர் .இப்படி சென்றால் மாநிலம் எப்படி முனேரும்.

சாராயம்

இன்று குஜராத்தில் சாராயம் குடித்து இறந்தவரின் எண்ணிக்கை 150.தாண்டியுள்ளது மக்களின் எழமயை பயன்படுத்தி அரசாங்கம் எழாமை மக்களின் உயிர்களை விலை பேசுகிறது.இவை தொடருமய்னால் மக்களின் எதிர்காலம் கேள்விகுறி அகிஉள்ளது.