ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திர பாபு நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக அதிரடிப்படை, சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
தமிழக வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.
வனப்பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக