புதன், 30 செப்டம்பர், 2009

தாய் பாசம்


ஒரு பெற்ற தாய்க்கு மரியாதையை கொடுகாடவன் அவன் வாழ்கையில் பெரும் துயருக்கு கண்டிப்பாக ஆலகுவான் .பணம் பொருள் இருந்தும் அவனுக்கு நிம்மதி எனும் சொர்க்கம் கண்டிப்பக்காக கிடைகாது .தாய் சிறந்த கோவில் இல்லை.எனும் பொருள் உலகர்த்திந்தது .உதவி செய வேணம் .செய்த உதவியை மறக்க குடாது .

திங்கள், 28 செப்டம்பர், 2009

பாரசூட்


ஆஸ்திரேலியாய்வில் மலை பகுதியில் பாரசூட் பயிற்சி இல் ஈடுபடும் வீரர் பறக்க காற்று வருவதற்காக ஒத்திகை பார்த்து கொண்டு உள்ளார்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

மணல் புயல் காற்று{ஆஸ்திரேலியா }]

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மணல் புயல் வீசி வருகிறது. இதனால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால், திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல நகரங்கள் மணல் புயலால் சூழப்பட்டுள்ளன. இதனால், சிட்னி நகர விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் இந்த மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று முன்தினம் துவங்கிய மணல் புயல் இன்று வரை நீடிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. விளைநிலங்களில் டன் கணக்கில் மணல் படிந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை விளைச்சல் இதனால் பாதிக்கப்படுமா என்பது பற்றி இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தெரியும்.

புதன், 23 செப்டம்பர், 2009

குடும்பம் கலைக்கும் விபசாரி {நடிகை }

என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்...
-நயன்தாரா சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

கமல்

ரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும்...கமல் அதிரடி பேட்டி
கமல்-மோகன்லால் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை முன்னிட்டு இணையதள செய்தியாளர்களை கமல் இன்று சென்னை சவேரா ஓட்டலில் சந்தித்தார்.உன்னைப்போல் ஒருவனில் வெடுகுண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்குதாமே?
இது வெடிகுண்டு நடக்காத தேசம் அல்ல. இனியும் பெரிய அளவில் நடக்கும். அப்படி நடக்காமல் இருப்பதற்காக ஒரு முன்னெரிக்கை மணி அடிக்கத்தான் வருகிறது உன்னைப்போல் ஒருவன்.
மருதநாயகத்தை தவிர உங்கள் ஏமாற்றம் வேறு என்ன?
என்ன...மருதநாயகம் எனக்கு ஏமாற்றமா. எனக்கு இல்லை. உங்களுக்குத்தான் ஏமாற்றம். என்றாவது மருதநாயகம் வரும். அதனால் உங்களூக்கும் ஏமாற்றம் என்று சொல்ல முடியாது.
விஜய்,அர்ஜூன்,பிரபு என்று வரிசையாக அரசியலுக்கு வருகிறார்களே. உங்களுக்கு ஐடியா இல்லையா?
அரசியல் எனக்கு போரடித்துவிட்டது. அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். இவன் எப்படி இப்படி பேசலாம் என்று விமரிசனங்கள் எழும். அரசியல்வாதிகள் விமர்சிப்பார்கள். ஆனாலும் இது என் கருத்து. எனக்கு அரசியல் செம போர்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஆசிரியர் தினம்


ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வா‌ழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆசிரியர் தின நல்வா‌ழ்த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல்,

செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!

பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடரா‌ய் எழுந்திட முடியும்.

அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்” மிகுந்த எழுச்சியோடும், மகி‌ழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெ‌ய்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்!

இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வா‌ழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வா‌ழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதலமைசர் மரணம்


ஐதராபாத்:

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி புதன் கிழமை காலை ஐதராபாத்திலிருந்து சித்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசுவிழாவிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மாயமானது.

ஆந்திர போலீசார் மத்திய பாதுகாப்புப்படையினர் இராணுவ ஹெலிகாப்டருடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கர்னூல் அருகில் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட ராஜசேகர ரெட்டியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கர்னூல் ஆந்திர அதிரடிப்படை போலீஸ் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு அவர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இரவு விடிய விடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், ஆந்திர முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடன் பலியான ஆந்திர அரசின் முதன்மைச்செயலாளர் சுப்பிரமணியம்,பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் பாடியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோர் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குபின் தனி விமானத்தில் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை வரை அங்கிருக்கும், பின்னர் மதியம் 2.00 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்தபின்பு முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் புலிவெந்தலா வரவுள்ளனர்.

நடிகர் விஜய் கண்டனம்


சென்னை:

சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற அவரை சந்தித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும், காங்கிரஸ் கட்சி அவரை வரவேற்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு மற்றும் தலைவர்கள் கூறிவந்தனர்.

இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

போலீஸ்

ழகத்தில் தீவிரவாதிகள் இல்லை: சைலேந்திரபாபு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திர பாபு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அதிரடிப்படை, சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழக வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.

வனப்பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.